Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மல்லசமுத்திரம், டிச. 23–வையப்பமலை– ராமாபுரம் பிரதானசாலை விரிவாக்கம் தேவையென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்லசமுத்திரம் அருகே உள்ள, வையப்பமலை முதல் ராமாபுரம் வரையில் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இச்சாலையின் வழியாக, நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்று வருகின்றது. குறிப்பாக, ராசிபுரம்– சங்ககிரிக்கு செல்ல குறுக்குவழி பாதை என்பதால், அதிகளவிலான மக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
அதுமட்டுமல்லாது. வாரம்தோறும் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இருதினங்கள் மோர்பாளையம் மாட்டுச்சந்தைக்கு பலமாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பலதரப்பினர் பயன்படுத்திவரும் இச்சாலை, மிகவும் குறுகலாக உள்ளது. எதிர்வரும் வாகனங்களுக்கு வாகன ஓட்டிகள் வழிவிடும் நோக்கில் சாலையைவிட்டு சற்று தள்ளி சென்றால் எதிர்பாராத விதமாக விபத்துகள் நடக்கிறது.
சாலையை விரிவாக்கம் செய்ய மக்கள் பலமுறை அதிகாரிகளிடத்தில் மனுஅளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, பிரதான சாலையை விரிவாக்கம் செய்ய சம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.